வீடொன்றில் மூவர் சடலங்களாக மீட்பு
குருநாகல் வீடொன்றில் நேற்றையதினம் வியாழக்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வயோதிபரான ஓய்வுபெற்ற ஆசிரியர்(வயது – 65) , அவரின் மகன் (வயது – 39 ), மகனின் மனைவி (வயது – 37 ) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மகனும், மருமகளும் படுக்கை அறையில் வாந்தி எடுத்த நிலையில் வியாழக்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த அறையில் பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு கிருமி நாசினிப் வெற்றுப் போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் இருவரும் கிருமி நாசினியைக் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஓய்வுபெற்ற ஆசிரியர் அதே வீட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மகன் மற்றும் மருமகள் இறந்த துயரத்தால் அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மூவரின் சடலமும் குருநாகல் வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்