வீடொன்றினுள் கேட்ட குழந்தையின் அழுகுரல் : உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

காலி, அம்பலாங்கொடை படபொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இளம் தம்பதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

28 வயதுடைய மனைவியும், 29 வயதுடைய கணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தம்பதியின் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அயல் வீட்டார்கள், குறித்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது தம்பதியர் உயிரிழந்திருப்பதைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, அயல் வீட்டார்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்