
வீடு திரும்பிய கணவனுக்கு அதிர்ச்சி : மனைவியின் செயலால் இடம்பெற்ற கொலை
இந்தியா கர்நாடகாவில் இளம் பெண்ணை, அவரது இரகசிய காதலனுடன் சேர்த்து கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
கர்நாடக மாநிலம் மாதனஹிப்பரகா கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதான பெண் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார் இளம் தம்பதி மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
23 வயதான குறித்த நட்பாக பழகியுள்ளார். நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அது திருமண பந்தத்தை மீறிய உறவாக எல்லை மீறியுள்ளது.
இந்த நிலையில் தனது கணவர் வெளியூர் சென்றதும், வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வெளியூருக்கு சென்ற கணவன் உடனே வீடு திரும்பியுள்ளார். அப்போது, தனது மனைவி குறித்த இளைஞனுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இருவரையும் ஒன்றாக கண்டவர் ஆத்திரத்தில் இருவரையும் உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். அப்படியும் ஆத்திரம் தீராத அவர், இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்தியேயே உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், இருவரின் உடல்களையும், மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இரட்டைக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இரட்டைக் கொலையால் மாதனஹிப்பரகா கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.