விஷமான உணவு: 21 சிறுவர்கள் வைத்தியசாலையில்

நுவரெலியா மாவட்டத்தில் உணவு விஷமானதன் காரணமாக 21 பாடசாலை சிறுவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வலப்பனை படகொல்ல புஸ்ஸதேவ ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த 21 சிறுவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்