
விவசாயிகளுக்கான மானியம் வழங்கல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன் கிழமை வழங்கப்படும் என்று கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 9 மாவட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்படும் என்று கமநல சேவைகள் ஆணையர் நாயகம் ரோஹண ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உர மானியம் ரூபா 20 வீதம் வழங்கப்படுகிறது. 2 ஏக்கர் வரம்பிற்கு உட்பட்டு, ஒரு ஏக்கருக்கு நெல்லுக்கு 25,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றும் நாளையும் குறித்த மானியம் வழங்கும் நடவடிக்கைக்காக 157 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்