
விருந்துபசாரத்துடன் இரு மரங்களுக்கு திருமணம் செய்து வைத்த மக்கள்
இந்தியாவில் மேற்கு வங்கத்தில் பூமி வெப்பமடைவதைக் குறைக்க ஆலமரம் மற்றும் அரச மரத்திற்கு இடையே விசித்திரமான முறையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த விநோத திருமணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெல்டாங்கா நகராட்சியில் வசிக்கும் கிராம மக்கள், டோலுவா தக்ஷின்பரா கோயில் வளாகத்தில் உள்ள ஆலமரத்தையும், அரச மரத்தையும் மணமகன், மணமகளாக நினைத்து அதற்கு அலங்காரம் செய்தனர். பெல்தங்கா உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் இந்த திருமணத்தைக் கண்டு ரசிக்க குவிந்தனர்.
ஆண்கள், பெண்கள் குழந்தைகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட சுமார் 3000-க்கும் மேற்பட்ட நபர்கள் சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டு இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர, தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் பலர் திருமண விழாக்களில் பங்கேற்பதற்காக இங்கு வருகை தந்தனர்.
மேலும் விருந்தினர்களுக்கு சுவையான விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரிசி மற்றும் பருப்பு கஞ்சி கிச்சடி மற்றும் தின்பண்டங்கள் பரிமாறப்பட்டன
சுவையான உணவுகள் மட்டுமின்றி, திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களை சந்தோஷப்படுத்த பாடல்கள் மற்றும் நடனங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கவழக்கங்களில் ஒன்றான ஆலமரங்களின் திருமண சடங்குகள் இந்து மத சாஸ்திரப்படி நடத்தப்பட்டது.
பலாஷ் மண்டல் மற்றும் உத்பல் மண்டல் என்ற இரண்டு உள்ளூர்வாசிகள் மர தம்பதிகளை ஆசீர்வதித்தனர். பலரையும் கவரும் வகையில் இந்த திருமண விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதன் மூலம் மரங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்கும் என தொழில்முனைவோர் தெரிவிக்கின்றனர்.
இங்கிருந்த 6-வது மரத்தை விற்பனை செய்து விட்டதாகவும், அதன் காரணமாக அடுத்ததாக மற்றொரு மரத்தை நட்டு, பின்னர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும் இந்த வித்தியாசமான திருமண விழா குறித்து கிராமமக்கள் தெரிவித்தனர். எல்லாமே முறையான விதிகளின்படிதான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்து மத சாஸ்திரங்களின்படி, ஆலமரம் மற்றும் அரச மரங்களை அருகருகே நட்டால் அதற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தற்போது அதன் அருகிலேயே இரண்டு ஆலமரங்கள் மற்றும் அரச மரங்களும் நடப்பட்டுள்ளதாக அதே கிராமத்தைச் சேர்ந்த பூசாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்