விமான ஓடுதளத்தை விற்பனை செய்த தாயும் மகனும்
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஓடுதளத்தை முறைகேடாக பயன்படுத்தி விற்பனை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டுவல்லா என்ற கிராமத்தில் உள்ள தாயும் மகனும் குறித்த ஓடுதளத்தை விற்பனை செய்துள்ளனர்.
தனிநபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து குறித்த இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
1997 ஆம் ஆண்டு போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்த சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.