
விந்தணு வங்கிக்கு நல்ல வரவேற்பு
கொழும்பு காஸல் வீதி மகளிர் மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட புதிய விந்தணு வங்கிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த வங்கியின் ஊடாக ஏற்கனவே 6 பெண்கள் பயனடைந்துள்ளனர். கணவன்-மனைவி உறவில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த வங்கி புதிய நம்பிக்கை வழங்கியுள்ளது.
இது இலங்கையில் குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் அஜித் குமார தன்தநாராயண தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
