விடுதியில் இணைக்கப்பட்ட மாணவி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

மன்னாரில் பெற்றோரால் கல்விக்காக விடுதியில் இணைக்கப்பட்ட மாணவி நேற்று திங்கட்கிழமை இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக்கடவையை சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் இலுப்பைக் கடவையை சேர்ந்த இம்மாணவியை பெற்றோர் முருங்கனில் உயர் கல்விக்காக விடுதியில் நேற்று இணைத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவி நேற்று இரவு தவறான முடிவெடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, உயிரிழந்த மாணவியின் சடலம் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்