
விஜித் விஜேமுனி சொய்சாவுக்கு பிணை
சட்ட விரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்ட வாகனமொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை அவர் முன்னிலையகியிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
6 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் வாலானா ஊழல் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
