விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் மருதமுனை ஹியுமன் லிங்க் நிறுவனத்தின் விசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்இ அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம் முஷாரப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் பி .எம் .எம்.ஜெளபர் ஏற்பாட்டில் ஹியுமன் லின்க் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.கமருதீன் தலைமையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் வி.சிவகுமார் இ சமூக சேவை உத்தியோகத்தர் எம்.எம்.ஜெஹ்ஸான், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர், மற்றும் பிரத்தியேக செயலாளர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப்பின் முயற்சியின் காரணமாக
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினூடாக கையளிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்