விகாரையில் இரத்தினக் கற்களைத் திருடியவர் கைது

மாத்தளை – லக்கலையில் உள்ள விகாரையில் உள்ள ஒரு பீடத்திற்குள் புகுந்து நான்கு விலையுயர்ந்த இரத்தினக் கற்களைத் திருடிய சந்தேக நபர் துப்பாக்கி மற்றும் திருடப்பட்ட ரத்தினக் கற்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தொரதெனியாவைச் சேர்ந்த 38 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பொலிஸ் குற்றப்பிரிவு உத்தியோகஸ்தர்களால் சந்தேக நபர் பக்கமுன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.