வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான தீர்த்த உற்சவம்
கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான சோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போது வசந்த மண்டப மற்றும் மஞ்சள் பூசைகள் என்பன இடம்பெற்று தீர்த்தமாடுவதற்காக பாசிக்குடா வங்கக் கடலுக்கு நூற்றுக்கணக்கில் பக்த அடியார்கள் கலந்து கொண்டு சென்றதுடன் அங்கு அபிஷேக பூசைகள் இடம்பெற்று தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவம் வெள்ளிக்கிழமை மாம்பழத்திருவிழா, திங்கட்கிழமை வேட்டைத்திருவிழா, செவ்வாய்க்கிழமை தேர்திருவிழா இடம்பெற்ற நிலையில் இன்று புதன்கிழமை பாசிக்குடா வங்கக் கடலில் தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.
உற்சவ பூசைகள் யாவும் மஹோற்சவ கால பிரதம குரு ஆகமபிரிவினா, பிரதிஸ்டா சாகரம் ‘வாமதேவ சிவாச்சாரியார், ஆர்ச்சார்ய பூசணம் சிவஸ்ரீ சபா பாஸ்கரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம் வரலாற்றைக் கொண்ட ஆலமாகும். இங்குள்ள மூல விக்கிரகம் கைலாய மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்களால் உருவாக்கப்பட்ட ஆலயமாகும்.