வாள்களுடன் இளைஞர்கள் இருவர் கைது

-யாழ் நிருபர்-

இரண்டு வாள்களுடன் இளைஞர்கள் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள்இ அண்மையில் மானிப்பாய் கடையில் வேலைசெய்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலுடன் தொடர்பெடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.