வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தனியுரிமை கொள்கைகள்

சமூக ஊடக தளமான வாட்ஸ்அப் மூன்று புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது, என மெட்டா தளங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

அதன்படி, மூன்று புதிய தனியுரிமை அம்சங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்,

1. அனைவருக்கும் தெரிவிக்காமல் குழு அரட்டையிலிருந்து வெளியேறவும்
2. நீங்கள் ஒன்லைனில் இருக்கும்போது யார் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்தவும்
3. ஒருமுறை செய்திகளைப் பார்க்கும்போது ஸ்கிரீன்ஷாட்களைத் (Screenshots) தடுக்கவும்

“உங்கள் செய்திகளைப் பாதுகாப்பதற்கான புதிய வழிகளை நாங்கள் உருவாக்கிக்கொண்டே இருப்போம், அவற்றை நேருக்கு நேர் உரையாடல்களாக தனிப்பட்டதாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்போம்”, என்று ஜுக்கர்பெர்க் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.