வாகன விபத்து: நால்வர் படுகாயம்

இந்தியாவில் சென்னை கோயம்பேடு அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படுகாயமடைந்தனர்.

டேங்கர் லாரி கிண்டியில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்தபோது திடீரென பிரேக் பிடிக்காததால் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் நால்வர் படுகாயமடைந்தனர். மேலும் விபத்தால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்