வாகன விபத்து: சிறுமி உள்ளிட்ட 7 பேர் படுகாயம்

இந்தியாவில் சென்னை, காசிமேட்டில் சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது முச்சக்கரவண்டி மோதி கவிழ்ந்ததில் சிறுமி உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு முச்சக்கரவண்டி வந்து கொண்டிருந்தபோது குறுக்கே நாய் ஒன்று வந்ததால் அதன் மீது மோதுவதை தவிர்க்க திருப்ப முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் விபத்து குறித்து தண்டையார்பேட்டை போக்குவரத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்