வாகன இறக்குமதி மூலம் 136 பில்லியன் வருமானம்
வாகன இறக்குமதி மூலம் 136 பில்லியன் வருமானம்
வாகன இறக்குமதியின் மூலம் இந்த வருடம் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 136 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, திறைசேரி அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் 450 பில்லியன் ரூபா வருமானத்தை வருட இறுதிக்குள் அடைய முடியுமெனவும் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கப் பிரிவில் இருந்து சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24