வவுனியா வாள்வெட்டு சம்பவம் : உயிரிழந்த பெண்ணின் கணவரும் உயிரிழப்பு

 

வவுனியா – தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் கணவர் இன்று புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்தத் தாக்குதலில்  இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில்,10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் கணவர் சுகந்தன் என்பவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன