
வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது
வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று புதன் கிழமை தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்ட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து 2 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதுடன் குறித்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.