வலி. மேற்கு பிரதேச சபையினால் வாய்க்கால் தூர்வாரல்

-யாழ் நிருபர்-

 

யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் இன்று வியாழக்கிழமை அராலி மத்தி குமுக்கன் வாய்க்கால் தூர்வாரப்பட்டது.

அடை மழை காரணமாக குடிமனைகளுக்கு தேங்கி நிற்கும் வெள்ளநீர் வடிந்தோட முடியாது காணப்பட்டது.

இந்நிலையில் குறித்த வாய்க்கால்  தூர்வாரப்பட்டது.

இதனை வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கந்தையா இலங்கேஸ்வரன் மேற்பார்வை செய்தார்.