
வடக்கு- கிழக்கில் வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி க்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தால் மேற்கொள்ள வடக்குஇ கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வெள்ளிக்கிழமை பேரணி ஒன்று வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது டன் பேரணியில் கலந்து கொள்வோருக்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள்இ வர்த்தகர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் எவ்வித பேதமின்றி ஆதரவளிப்பதுடன், முல்லைத்தீவில் நடைபெற உள்ள போராட்டத்திலும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
