
வடக்கில் 16ஆயிரம் ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை
வடக்கில் 16ஆயிரம் ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்ப்பிடி , நீர்வளம் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய நிலங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்குறிப்பிட்டார்.
தேங்காய் செய்கையை முறையாகப் பராமரிக்கப்பட்டால், எதிர்காலத்தில் அந்தப் பகுதிகளில் பொருளாதாரம் செழிக்க முடியும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் .
