லொட்டரியில் விழுந்த பணம்: உரிமையாளர் இன்றி தவம் கிடப்பு

கனடாவில் நியூ பிரன்சுவிக் பகுதியில் லொட்டரிக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை அதன் உரிமையாளர் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பரிசு அறிவித்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டதாகவும், பரிசு தொகையான 64 மில்லியன் டொலர் வென்றுள்ள நபர் இதுவரை தங்களை அணுகவில்லை என தெரிவித்துள்ள நிர்வாகிகள், மிக விரைவில் அவரிடம் இருந்து அழைப்பு வரும் என நம்புவதாக சமூக ஊடக பக்கத்தில்.

பொதுவாக, லொட்டரி வெற்றியாளர்கள் ஒரு சில தினங்களுக்குள் தங்களை தொடர்பு கொள்வது வழக்கம், ஆனால் குறித்த பரிசு தொகை தொடர்பில் இரண்டு வாரமாக எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

வெற்றியாளரை அறிவித்த நாளில் இருந்துஇ தொகையை பெற்றுக்கொள்ள 12 மாதங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. 12 மாதங்களுக்கு பின்னர் அந்த தொகையானது உரிமை கோரப்படாத தொகை என கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க