
‘லொக்கு பெட்டி’க்கு சொந்தமான துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றல்
பெலரூஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா என்பவருக்கு சொந்தமான வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பன மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
லொக்கு பெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் களுத்துறை – வெலிபென்ன தர்கா நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போத்தல் ஒன்றிற்குள் வைத்து குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேல்மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.