லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 15 பேர் பலி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு லெபனானில் உள்ள சிடன் நகருக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை காசாவில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தெற்கு லெபனானில் இடம்பெற்ற மோதலில் 33 இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரிழந்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.