லண்டன் வோள் இஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய உண்டியல் பணத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

அகிலன் பவுண்டேசன் ஏற்பாட்டில் , இலண்டன் வோள் இஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிதிப்பங்களிப்பில், அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் கற்றல் உபகரணங்களை இழந்த, பதுளை மாவட்டம் அல்-இரிசாத் மகா வித்தியாலய மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு அகிலன் பவுண்டேசன் பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் , வித்தியாலய அதிபர், பிரதி அதிபர் ,ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

கல்விக்காக கரம் கொடுத்து உதவிய அனைவருக்கும் நன்றிகளை பெற்றோர்கள் தெரிவித்தனர்.