ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானம்

இலங்கையின் கடற்படையினரால் கைது செய்யப்படுவதை கண்டித்து இன்று முதல் ராமேஸ்வர கடற்றொழிலாளர்கள், காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக, அதிகளவில் இலங்கை கடற்படையினரால், தமது தரப்பினர் கைது செய்யப்படுவதாக தமிழக கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேநேரம் அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கை தாமதமாகி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேநேரம் தமிழக கடற்றொழிலாளர்களின் அடிமட்ட இழுவைப்படகுகள் காரணமாக தமது மீன்வளம் அருகி வருவதாக இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.