ராமநாதபுரம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை மீன் பிடி படகு

-மன்னார் நிருபர்-

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கடற்கரைப் பகுதியில் இலங்கை மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி படகு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கி உள்ளதாக மரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் பொலிஸார் படகில் கடத்தல்காரர் யாரும் கடத்தல் பொருள்களை கொண்டு வந்தார்களா? அல்லது கடல் சீற்றம் காரணமாக நங்கூரம் அறுந்து படகு கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியதா? என பல்வேறு கோணங்களில் மரைன், கியூ பிரான்ஞ் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.