
ராமநாதபுரத்தில் மயக்க மருந்து கலந்த தேநீர் கொடுத்து முதியவரிடம் கொள்ளை
இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த 72 வயதுள்ள முதியவர் மைக்கேல், கோவை சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியபோது, மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில், அறிமுகமான நபர் ஒருவர், தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
தானும் முதுகுளத்தூரை சேர்ந்தவன்தான் என்று குறித்த முதியவரிடம் இயல்பாக பழகி பேருந்தில் இடமும்பிடித்து கொடுத்து அவர் அருகிலேயே அமர்ந்த நபர், முதியவருக்கு தேநீர் வாங்கி வந்து அதில் மயக்க மருந்து கலந்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
மயக்க மருந்து கலந்த தேநீரை குடித்த குறித்த முதியவர் மயக்கம் அடைந்ததை அடுத்து அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம், ஒன்னேகால் பவுன் தங்க மோதிரம் உள்ளிட்ட பொருள்களை, குறித்த நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும் பேருந்நில் வாந்தி எடுத்து மயங்கிக் கிடந்த முதியவருக்கு, சக பயணியாக பேருந்தில் பயணித்த ராமநாதபுரம் அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் மீட்டு சிகிச்சை அளித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்