ராஜகிரியவில் உள்ள அலுவலகக் கட்டிடத்தின் மேல் தளத்தில் தீப்பரவல்

கொழும்பு – ராஜகிரியவில் உள்ள பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகக் கட்டிடத்தின் மேல் தளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மேலும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

நிலைமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.