ரஷ்யாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நில அதிர்வு

ரஷ்யாவில் உள்ள கம்சாட்காவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

அதன்படி 6.3,6.1 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

கம்சாட்காவில் ஏற்பட்ட நில அதிர்வால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் அப்பகுதியினர் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை