ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் நேற்று வியாழக்கிழமை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே கொழும்பிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்