ரம்புக்னைக்கு சென்றார் இ.தொ.க தலைவர்

ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நாரன்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லக்ஷானின் வீட்டுக்கு நேரில் சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், அன்னாரது குடும்பத்துக்கு இ.தொ.கா. சார்பிலும் மலையக மக்கள் சார்பிலும் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு இ.தொ.கா. சார்பாகத் தமது கடுமையான கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.

மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றும் பக்கபலமாக இருக்கும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

இதன்போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் அண்ணாமலை பாஸ்கரனும் கலந்துகொண்டிருந்தார்.