ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் தொலைபேசி அழைப்பின் மூலம் அமெரிக்கா விதித்த வரியை நீக்கியிருப்பார்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்திருந்தால், அமெரிக்காவிற்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 44 வீத வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்குவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் ஆலோசனையின் பேரில் டிரம்ப் நிர்வாகத்தில் இந்த வரி விதிக்கப்பட்டதாகக் கூறினார்.

எலோன் மஸ்க் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்றும், இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க பேச்சுவார்த்தை நடத்த இந்த வலுவான நட்பைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதியாக இல்லாததால் இலங்கை அந்த வாய்ப்பை இழந்துவிட்டது என்று ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்திருந்தால் 44 வீத வரியை முழுமையாக நீக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் 24 வீதமாக குறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க