ரணிலுடன் இணையும் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியுடன்  ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து கூட்டு அரசியல் திட்டத்தைத் தொடங்குவதற்கான முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.

இந்த முடிவை அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவும் நிர்வாகக் குழுவும் ஒரு பொதுவான கொள்கை கட்டமைப்பில் இணைந்து பணியாற்றுவதற்கான கூட்டு உடன்பாட்டை எட்டியுள்ளதாகக் கூறினார்.

நாட்டு மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு ஜனநாயக மற்றும் முற்போக்கான தீர்வுகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.