ரணிலிடம் இருந்து அமைதியான முறையில் அதிகார மாற்றத்தை ஏகேடி எதிர்பார்க்கின்றார்..?

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க அமைதியான முறையில் அதிகார மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க, தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட வாரிசுக்கு வழிவகுப்பார் என நான் நம்புகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்தார்.

அதிகார மாற்றத்தின் போது ஜனாதிபதி எந்தவொரு பிரச்சினையையும் உருவாக்குவார் என தாம் நம்பவில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் மேலும் தெரிவித்தார்