யாழ் மருத்துவ சங்க ஏற்பாட்டில் வீதி விபத்து விழிப்புணர்வு
-யாழ் நிருபர்-
யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ சங்க ஏற்பாட்டில் கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வீதி விபத்து விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று இடம்பெற்றது.
அண்மைக்காலமாக நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகமாக உள்ளதால் இவ்வாறான விழிப்புணர்வு கருத்தரங்கு மூலம் விபத்துக்களை குறைப்பது இதன் நோக்கமாகும்.
இதில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், போக்குவரத்து ஆணையாளர், சட்ட வைத்திய நிபுணர் க.மயூரன்
சிறுவர் குழந்தை சத்திர சிகிச்சை நிபுணர் ப.சஜந்தன், உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.