யாழ். சேந்தாங்குளம் பகுதியில் இருவரை காணவில்லை
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவர் காணாமல் போயுள்ளனர்.
40 மற்றும் 50 வயதுடைய இருவர் நேற்று திங்கட்கிழமை கடற்றொழிலுக்கு படகு ஒன்றில் சென்றுள்ளனர். இவ்வாறு தொழிலுக்கு சென்ற இருவரும் இதுவரை வீடு திரும்பி வரவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளில் மீனவர்களும் கடற்படையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.