யாழ் செம்மணியில் 122 மனித எலும்பு கூடுகள் மீட்பு
யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளானது இரண்டாவது கட்டத்தின் 27 வது நாள் ஆகிய இன்று வெள்ளிக்கிழமை நீதிவான் ஏ.ஈ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.
இன்றையதினம் புதிதாக மேலும் நான்கு மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரை 122 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்றையதினம் 7 எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுவரை மொத்தமாக 112 மனித எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்த எடுக்கப்பட்டுள்ளன.