
யாழ். சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் திறந்து வைப்பு
யாழ். சிறைச்சாலையில் சிறைக்கைதிகளின் நலன்களுக்காகவும் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் முகமாகவும் கணினி பயிற்சி நிலையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் சீனிவாசன் இந்திர குமார தலைமையில் இடம்பெற்றது.
இலங்கையில் முதன் முறையாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலேயே இவ்வாறு கணினி பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்படுவதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திரகுமார் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் புனர் வாழ்வு பிரிவினால் கைதிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கைதிகள் நலன்புரி சங்கத்தின் சிரேஷ்ட சிறையதிகாரி ஸ்ரீ மோகன், நைட்டா நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் ராஜராஜேஸ்வரன் திருமுருகன், சிறைச்சாலைகள் உளவளத் துணை ஆலோசகர் தர்ஷினி கோபி, மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்