
யாழ்ப்பாணம் வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் களமிறக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார்
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சற்று முன்னர் கலகத் தடுப்பு பொலிசாரும் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
