
யாழ்ப்பாணத்தில் கடல் தொழிலுக்கு சென்ற மீனவர் உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில், நேற்று சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
குருநகர் பகுதியை சேர்ந்த அல்போன்சோ சந்தியாப்பிள்ளை (வயது – 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இரண்டு மீனவர்கள் நேற்றையதினம் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில், குறித்த மீனவருக்கு இன்றையதினம் உடல் சுகயீனம் ஏற்பட்டு ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்