யாழைச் சேர்ந்த பெண் நோர்வேயில் பலி
நோர்வேயில் வாழ்ந்து வந்த யாழ் – பொலிகண்டியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய் உயிர்மாய்த்துள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
யாழைச் சேர்ந்த 34 வயதுடையரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த பெண் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் இவ்விபரீத முடிவை எடுத்துள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
நேற்றைய தினம் நோர்வேயில் குறித்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் இடம் பெற்றது
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.