யாழில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் கடவுச்சீட்டு பணிமனையை இயங்கச் செய்யும் நோக்கில் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய பணிமனையை யாழ்ப்பாணத்தில் அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இதற்காக யாழ். மாவட்ட செயலகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தை கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பார்வையிட்டிருந்தார்.

இந்த நிலையில் கடவுச்சீட்டு பணிமனையை அமைக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட குடிவரவு  குடியகல்வு திணைக்களத்தில் கடமையாற்ற தேவையான தமிழ் உத்தியோகத்தர்களை அரச திணைக்களங்களில் இருந்து தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க