யாழில் மின்சாரம் தாக்கி 17 வயது இளைஞன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கரத்தை – துணைவி பகுதியைச் சேர்ந்த அருள்ஜீவன் பிரசாத் (வயது 17) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்.

குறித்து இளைஞன் ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வாகன சேவிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார். இதன் போது இன்றையதினம் அங்கு பணிபுரியும்போது மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.

மின்சார தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.