யாழில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்-

17 தொடக்கம் 18 வயதுடைய மூவர் நேற்று ஞாயற்றக்கிழமை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 20 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.