யாழில் கேரளா கஞ்சா மீட்பு

-கிளிநொச்சி நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை இரவு 10:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு முல்லைத்தீவு விசேட அதிரடிப் படையினரால் விசேட சுற்றிவளைப்பு செம்பியன் பற்று தெற்கு பகுதி முழுவதும் மேற்கொள்ளபட்டது.

சுற்றி வளைப்பில் 8 பொதிகள் அடங்கிய 15.795 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் தப்பி சென்றுள்ளார். மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.