
யாழில் கரையொதுங்கிய திமிங்கிலம்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் இன்று திங்கட்கிழமை திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 12 மணியளவில், 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்து கரையொதுங்கியது.
குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Beta feature
Beta feature