
யாழில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள மிதவை!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி – பருத்தித்துறை, ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று, இன்று செவ்வாய்க்கிழமை கரையொதுங்கியுள்ளது.
கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம், என்று தெரிவிக்கப்படும் அதேவேளை, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது
கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள், மிதவைகள் போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்